முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியில் மாயமான சிறுவன்! இன்று வெளியான தகவல்!

முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 16 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்த சிறுவனும் அவரது தந்தையும் நீராட சென்ற வேளையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தந்தையின் சடலம் அதே நாளில் மீட்கப்பட்டிருந்த நிலையில், மகனின் உடல் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.